Pakistan Tri-Series: சமீப நாள்களாக, ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில், ஆப்கானிஸ்தானில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அதில் மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Add Zee News as a Preferred Source
முத்தரப்பு தொடர் எப்போது?
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடைபெற இருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்காது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் வரும் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 29ஆம் தேதிவரை நடைபெறும் இந்த டி20ஐ முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோத இருந்தன.
தற்போது இந்த தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகியிருப்பதன் மூலம் மற்றொரு அணியை தொடரில் சேர்க்க முடிய நெருக்கடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் 11 முதல் நவம்பர் 15ஆம் தேதி வரையில் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதிக்கொள்கின்றன. அந்த தொடரும் பாகிஸ்தான் நாட்டில்தான் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்வது என்ன?
ஆப்கானிஸ்தான் அணி முத்தரப்பு தொடரில் இருந்து விலகினாலும், முத்தரப்பு டி20ஐ தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் லாகூர் நகரில் நடைபெற இருக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கு பதில் இந்த முத்தரப்பு தொடரில் விளையாட பல்வேறு கிரிக்கெட் வாரியங்களுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “ஆப்கானிஸ்தான் அணி விலகிய பிறகும் முத்தரப்பு தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். மாற்று அணியை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம், இறுதியானதும் அறிவிப்பு வெளியாகும். முத்தரப்பு தொடரில் இலங்கை அணி மூன்றாவது அணி இடம்பெறும், நவம்பர் 17ஆம் தேதி முதல் இத்தொடர் தொடங்குகிறது.
வேறு அணிகள் வர வாய்ப்புள்ளதா?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளம் கிரிக்கெட் வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாட்டை முத்தரப்பு தொடருக்குள் கொண்டுவருவதையே விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற பிறகு இதுவரை பாகிஸ்தான் அணியுடன் இருதரப்பு தொடரில் அந்த அணி விளையாடியதில்லை. ஐசிசி மேற்பார்வைக்கு முன், ஆப்கானிஸ்தான் A அணி அடிக்கடி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். பல ஆப்கன் வீரர்களும் முன்னர் பாகிஸ்தானில்தான் பயிற்சி மேற்கொண்டனர். ஒரு காலகட்டத்தில், ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்களின் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் பாகிஸ்தான் அணி அனுமதி அளித்தது.
மேலும் படிக்க | ஆஸி., தொடரில் 3 செஞ்சுரி அடித்தாலும்.. கோலி, ரோகித்துக்கு.. ஒரே போடாக போட்ட அஜித் அகர்கர்!
மேலும் படிக்க | இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள்: விராட் கோலியின் சாதனைகள் என்னென்ன?
மேலும் படிக்க | சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் கடுமையாக போராடுகின்றனர்.. புகழ்ந்து தள்ளிய டேவிட் வார்னர்!
About the Author
Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More