வங்கி அதிகாரிகள் ​முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: போலி ஆவணங்​கள் மூலம் நிலம் அபகரிப்​பு, வங்​கிக் கடன் பெற்று மோசடி, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி உட்பட பல்​வேறு வகை​யான மோசடிகள் தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் தின​மும் புகார்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இது தொடர்​பாக மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதில் தொடர்​புடைய மோசடிக்​காரர்​கள் அடுத்​தடுத்து கைது செய்​யப்​படு​கின்​றனர். தொடர் விசா​ரணை​யில் பெரும்​பாலான மோசடி வழக்​கு​களின் பின்​னணி​யில் ஏதாவது ஒரு வங்கி ஊழியர் அல்​லது வங்கி அதி​காரி இருப்​பது போலீ​ஸாருக்கு தெரிய​வந்​தது. முன்பு அவர்​களை போலீ​ஸார் எச்​சரித்து வழக்​குப் பதி​யாமல் அனுப்​பி​விடு​வார்​கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.