நாகர்கோவில்: தமிழ்நாட்டை டெல்லியிலிருந்து ஆள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்றிய அதிமுகவை தங்களது கைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று(ஏப்.20) பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள லட்சுமி புரத்தில் இன்று முற்பகல் 11 மணிஅளவில் உரையாற்றினார். முன்னதாக குமரி […]