சென்னை: இலங்கையால் கைது செய்யப்பட்ட 83 மீனவர்கள், 252 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும், தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 10 மீனவர்கள் கைது: […]