IND vs NZ: இன்று அறிவிக்கப்படும் இந்திய அணி… யார் யாருக்கு வாய்ப்பு? சர்ப்ரைஸ் இருக்குமா?

IND vs NZ, Team India Squad: நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 3 ஓடிஐ போட்டிகள் மற்றும் 5 டி20ஐ போட்டிகளை இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. Add Zee News as a Preferred Source அடுத்து வரும் பிப்ரவரி … Read more

"அது அராஜகம்; பி.வி.ஆர் இதை கெளரவ குறைச்சலாக நினைக்கிறாங்களாம்!" – சுரேஷ் காமாட்சி பேட்டி

இயக்குநர் கிட்டு இயக்கத்தில் உருவான ‘சல்லியர்கள்’ திரைப்படம் இந்த வருடத்தின் முதல் தமிழ் ரிலீஸ்களில் ஒன்றாக திரைக்கு வரவிருந்தது. கருணாஸ் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், கடைசி நேரத்தில் படத்திற்கு வெறும் 27 திரைகளே ஒதுக்கப்பட்டதால் திரையரங்க வெளியீட்டை தவிர்த்துவிட்டு, படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டிருக்கிறார்கள். சல்லியர்கள் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது குறித்து காட்டமாக செய்தியாளர்களிடம் பேசியிருந்தார் சுரேஷ் காமாட்சி. இதற்கு பின்னாலுள்ள பிரச்னையென்ன என்பதை கேட்டறிவதற்கு … Read more

மெட்ராஜ் ஐஐடியில் சாஸ்த்ரா, சாரங் 2026 திருவிழாவையும், குளோபல் மையத்தையும் தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர்…

சென்னை: நாட்டின் நம்பர்1 தொழில்நுட்ப  நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் நிகழ்ச்சியில்,  சாஸ்த்ரா, சாரங் 2026 திருவிழாவையும், குளோபல் மையத்தை[யம் மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர்  தொடங்கி வைத்தார். மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், ஐஐடி மெட்ராசில் நடைபெறும் இருவார நிகழ்வுகளான சாஸ்த்ரா மற்றும் சாரங் 2026-ஐத் தொடங்கி வைத்ததுடன், உலகளாவிய தொலைநோக்கு, யோசனைகள் மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டாடும் ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் ஃபவுண்டேஷனையும்  ( குளோபல் மையம்) தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு … Read more

கேரளாவில் போதைப்பொருள் வினியோகம் – பல் மருத்துவ மாணவி உள்பட 7 பேர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. மாணவர்கள்- இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் போதைப்பொருட்கள விற்பனையை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் போதைப்பொருட்கள் விற்பனையின் முக்கிய குற்றவாளியான அசிம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்யார் அணை அருகே உள்ள சோதனைச்சாவடி யில் போதைப்பொருள் தடுப்பு குழு சப்-இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது காரால் மோதிவிட்டு தப்பிச் சென்றார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் … Read more

மகளிர் பிரிமீயர் லீக்: பெங்களூரு அணியின் ஜெர்சி அறிமுகம்

புதுடெல்லி, 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. நவிமும்பையில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், 2026 மகளிர் பிரிமீயர் லீக் தொடருக்கான பெங்களூரு அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1 More update தினத்தந்தி Related … Read more

2026 எப்படி இருக்கும்? பீதியை கிளப்பும் பாபா வங்கா கணிப்புகள்

வாஷிங்டன், ஒவ்வொரு புதிய ஆண்டு தொடங்கும்போது சில பெயர்கள் அதிகளவில் உச்சரிக்கப்படும். அத்தகைய பெயர்களில் ஒன்றுதான் பாபா வாங்கா. புதிய வருடத்தில் உலகளவில் என்ன மாற்றங்கள் நிகழும், எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்படும், இயற்கை சீற்றங்கள், பேரழிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் பாபா வாங்கா என்ன கூறியுள்ளார் என்ற தகவல்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பேசுபொருளாகும். அதன்படி 2026ம் ஆண்டு குறித்து அவர் தெரிவித்த கணிப்புகள் தற்போது பேசு பொருளாகி வருகின்றன. பாபா வாங்கா என்பவர் … Read more

ரொக்கம் உண்டா? பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 8ந்தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு தொகுப்புடன்  பொங்கல் செலவுகளுக்கான ரொக்கப் பணம் உண்டா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி,  , ஒவ்வொரு ஆண்டும்  ரேசன்கார்டுதாரர்களுக்கு அரசு சார்பில் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், இந்த இலவச தொகுப்புடன் பணமும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுகஅரசும், கடந்த  2022, … Read more

இந்தூர் விவகாரத்தில் பிரதமர் மவுனம்: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி, இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்று பாராட்டப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகரில் குடிக்கும் குடிநீரே பொதுமக்களுக்கு விஷமாக மாறி உள்ளது. இந்தூர் பாகீரத்புராவில் குடிநீர் நஞ்சான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தூர் மேயர் புஷ்யமித்ரா பார்கவா கூறியிருந்தார். ஊடகங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் தகவலின் படி, 14 பேர் உயிரிழந்திருப்பார்கள் என தெரிகிறது. சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் … Read more

டி20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

கேப்டவுன், 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , ரிக்கல்டன் அணியில் இடம் பெறவில்லை. தென் … Read more

ஈரானில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்; அமெரிக்கா களத்தில் இறங்கும் – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதியதாகவும், கற்களை வீசியதாகவும், வாகனங்களை எரித்ததாகவும் உள்ளூர் ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சில ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பல்வேறு நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், … Read more