நாளை மகரஜோதி: சபரிமலையில் குவிந்த பக்தர்கள் – பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணங்கள்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அன்றைய தினம் சாமி அய்யப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி, திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்படும். அவ்வாறு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த திருவாபரணங்கள் பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி தலைமையில் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவாபரண ஊர்வலம் நேற்று பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா … Read more

ஷிகர் தவானுக்கு நிச்சயதார்த்தம்; காதலியை கரம் பிடிக்கிறார்…!

அபுதாபி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இவருக்கும் ஆயிஷா முகர்ஜி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சொரவர் தவான் என்ற மகன் உள்ளார். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஷிகர் தவான் – ஆயிஷா முகர்ஜி தம்பதி விவாகரத்து பெற்றனர். இதனை தொடர்ந்து அயர்லாந்தை சேர்ந்த சோபியா ஷைன் என்ற பெண்ணுடன் ஷிகர் தவானுக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, … Read more

"சிவப்பு கோட்டை தாண்டிய ஈரான்" – எலான் மஸ்க்கை வைத்து பெரிய பிளான் போடும் டிரம்ப்

ஈரான் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாகவும், அமெரிக்கா இதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், ஏர்போர்ஸ் ஒன் (Airforce one) விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானில் உள்ளவர்கள் தலைவர்களா? அல்லது வன்முறை மூலம் ஆட்சி செய்கிறார்களா? என்பது தனக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார். ஈரான் நிலைமை குறித்து அமெரிக்க அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். ஈரானில் வன்முறையை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டுள்ள … Read more

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் முன்விரோதம்; Instagram ரீல்ஸால் கோபம்; இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கீழ வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகன் இன்பரசன் (வயது: 25). இவர், சென்ட்ரிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். மேலும், இவர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராகவும் இருந்து வந்துள்ளார். இன்னொருபக்கம், பொற்பனைக்கோட்டை, மணக்கொல்லை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(வயது: 21), தெற்கு இம்மனாம்பட்டி ரஞ்சித் மற்றும் இவர்களது நண்பர்கள் ஒன்றிணைந்து அன்பு பாய்ஸ் என்ற பெயரில் … Read more

பொங்கலுக்கு இத்தனை படங்கள் ரிலீஸா…எந்தெந்த படத்தை எங்கு பார்க்கலாம், முழு பட்டியல் இதோ

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் திரையரங்கிலும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. எனவே எந்த படங்கள் எந்த தளத்தில் வெளியாகப் போகிறது என்பதை இங்கு காணலாம்.

தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்! சொல்கிறார் செல்வப்பெருந்தகை

சென்னை: தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று கூறிய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை . ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்ற   அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்துக்கு தமிழ்நாடு பதில் தெரிவித்துள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து, இது குறித்து கட்சித் தலைவர்களே முடிவு செய்வார்கள் என செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் நீடிக்கும் காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் தேர்தலில் தங்களுக்கு … Read more

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக இன்று (13-01-2026) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே காரைக்கால் பகுதிகளில் விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை … Read more

தேசிய சீனியர் கூடைப்பந்து இறுதிப் போட்டி: தமிழக அணியை வீழ்த்தி இந்தியன் ரெயில்வே ‘சாம்பியன்’

சென்னை, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 75-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டி நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி, இந்தியன் ரெயில்வேயை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழக அணி முதல் கால்பகுதியில் 10-20 என்று பின்தங்கியது. அதில் இருந்து மீள தமிழக அணி கடுமையாக முயற்சித்த போதிலும் கடைசி வரை ரெயில்வேயின் ஸ்கோரை எட்ட முடியவில்லை. … Read more

இது பாண்டாவா? இல்லை மனிதனா?… ஜப்பான் பூங்காவில் நடந்த வித்தியாச சம்பவம்

டோக்கியோ, ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் பாண்டாக்கள் இல்லாததால், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டி வருகின்றனர்! பூங்காவில் இருந்த 4 பாண்டாக்களும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதற்கு முன் வரிக்குதிரைக்கு பதிலாக கழுதைக்கு வண்ணம் பூசியது சீனாவில் பேசுபொருளானது. ஜப்பானில் உள்ள ஒரு பூங்காவில் பாண்டாக்கள் இல்லாத நிலையில், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகின்றனர். பூங்காவில் இருந்த நான்கு பாண்டாக்களும் சமீபத்தில் சீனாவுக்கு திருப்பி … Read more