Rajini: தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மை; நேரில் அழைத்து தங்கச் சங்கிலி வழங்கி பாராட்டிய ரஜினி!

ரஜினி சமீபத்தில் மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா கடை நடத்தி வரும் தனது ரசிகரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். பாராட்டியதோடு ஒரு தங்கச் சங்கிலியையும் அவருக்கு பரிசாக வழங்கியிருந்தார் ரஜினி.

அதைத் தொடர்ந்து, இன்று தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார்.

பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி
பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி

அத்துடன் ஒரு தங்கச் சங்கிலியையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார் ரஜினி.

அதைத் தொடர்ந்து, ரஜினி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

தூய்மைப் பணியாளராக இருக்கும் பத்மா, கடந்த ஜனவரி 11-ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் (தி.நகர்) பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது குப்பையில் 45 சவரன் தங்க நகைகளைக் கண்டெடுத்தவர், அதை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி
பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி

இவரது நேர்மையைப் பலரும் பாராட்டியிருந்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பத்மாவை நேரில் அழைத்து, அவரது நேர்மையைப் பாராட்டியதோடு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது ரஜினியும் பத்மாவை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

ரஜினி தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு ‘டான்’ சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்திற்கு செல்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.