Arya: "அப்படிச் செய்தால் படம் காலியாகிடும்!" – ஆர்யா ஓபன் டாக்

ஆர்யா, கெளதம் கார்த்திக், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் ஆர்யா, அவருடைய கரியரில் பல மல்டி ஸ்டாரர் படங்களைச் செய்திருக்கிறார்.

அப்படியான மல்டி ஸ்டாரர் படங்களைத் தேர்வு செய்வது பற்றி சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆர்யா.

ஆர்யா பேசுகையில், “ராஜா ராணி திரைப்படத்தில் நான் டபுள் கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஒருவருடைய கேரக்டர் வலுவாக இருந்தால்தான், இன்னொரு கேரக்டர் மெருகேறும்.

‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில், டான்சிங் ரோஸ், வாத்தியார் என அனைவருடைய கதாபாத்திரமும் மிகவும் முக்கியம்.

அப்படி இல்லையென்றால், அது சாதாரணமான ஒரு ஹீரோ திரைப்படமாக மாறிவிடும். அந்தப் புரிதலும், இப்படியான கேரக்டர்களை ஏற்று நடிக்கத் தன்னம்பிக்கையும் வேண்டும்.

நமக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நாம் சிறப்பாக நடிக்க வேண்டும். ஒரு நடிகராக இப்படி நாம் செக்யூராக உணர வேண்டும்.

நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா

மல்டி ஸ்டாரர் திரைப்படங்களில் நடிக்கும்போது, அங்கு வலுவான போட்டியும் இருக்கும். அத்தனை நடிகர்கள் ஒரு காட்சியில் நடிக்கும்போது, நம்முடைய பெஸ்டை நாம் கொடுக்க வேண்டும் என நமக்குத் தோன்றும்.

பரஸ்பரம் பாராட்டுகளைப் பகிர்ந்துகொள்வோம். அப்போது, அந்தக் காட்சியும் நல்லபடியாக வரும்.

சில நேரங்களில் நம்மைவிட மற்றொரு நடிகருக்கு நல்ல காட்சி இருக்கிறதே என நினைத்து, காட்சிகளை மாற்றினால், படமே காலியாகிவிடும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.