சென்னை: சித்ரா பவுர்ணமி வரும் 30ந்தேதி வர உள்ளதால், அன்றைய தினம் திருவண்ணாமலையில் குடியிருக்கும அண்ணாமலையை கிரிவலம் செய்வதற்கான நேரம் விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நினைத்தாலே முக்தியை தரும் புண்ணிய தலமான திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம் செல்வது பாவங்கள் போக்கி, முக்தியை அருளக் கூடியதாகும். அனைத்து பெளர்ணமிகளிலம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பு. பொதுவாக பெளர்ணமி நாளில் சிவ தரிசனம் செய்து, சிவ வழிபாடு , முருகன் வழிபாடு, குல தெய்வம் வழிபாடுகள் செய்வது சிறந்தது. […]