இந்தியாவில் 680 நாட்களுக்கு பிறகு 2,503 ஆக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 2,503 ஆக குறைந்தது. இது கடந்த 680 நாட்களில் பதிவான மிகக்குறைவான பாதிப்பாகும்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,503 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,29,93,494 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 4,377 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,41,449 ஆனது. தற்போது 36,168 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 27 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,15,877 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 180.19 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 4,61,318 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.