நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து முழு ஊரடங்கை பிறப்பித்து அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின்
சாங்சுன்
நகரில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை அடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சாங்சுன், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில்
முழு ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு?

அந்த வகையில், ஜிலின் மாகாணத்தில், கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 2.4 கோடி மக்கள் வசிக்கும் ஜிலின் மாகாணத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே ஜிலின் மாகாணத்தில் கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஜிலின் மாகாணத்தில், கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சீன மக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனா நிலைமையை பொறுத்து மற்ற நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாகலாம் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.