2021ம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்து நாட்டின் கரோலினா பியலவுஸ்கா தேர்வு.!

2021ம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்து நாட்டின் கரோலினா பியலவுஸ்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த உலக அழகி போட்டி, போட்டியாளர்கள் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

சான் ஜுவான் நகரில் நடைபெற்ற இறுதி சுற்றில் 40 நாடுகளின் அழகிகள் பங்கேற்றனர். இதில், 2019ம் ஆண்டு போலந்து நாட்டு அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கரோலினா பியலவுஸ்கா உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ஸ்ரீ சைனி  2வது இடத்தையும், ஐவரி கோஸ்ட் நாட்டின் ஒலிவியா யேஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்திய அழகி மானசா வாரணாசி 13வது இடத்தைப் பெற்றார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.