முதலமைச்சர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் 17 கோடி என போலி செய்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி கைது..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றது தொடர்பாக அவதூறு பரப்பியதாக சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முதலமைச்சர் பயணத்தின் போது அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட்டின் விலை 17 கோடி என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

அந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சமூக ஊடகத்தை கண்காணிக்கும் காவல்துறை பிரிவின் முதல் நடவடிக்கை இந்த போலி செய்தியை பரப்பிய நபர் மீது எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் இறங்கிய போலீசார், சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த அருள்பிரசாத்தை கைது செய்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.