வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களினுள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

மாதம்பே, கடுபொத, தங்கல்ல, அலவ்வ மற்றும் நாரம்மல ஆகிய பிரதேசங்களில் இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் அடங்குவர்.
இதேவேளை, ஹொரபே புகையிரத நிலையதத்தில் வைத்து புகையிரதயத்துக்கு ஏற முற்பட்ட ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்ததனால்  ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.