மாஜி மனைவிக்கு எதிராக டி. இமான் பரபரப்பு புகார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான
டி. இமான்
தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இமான் தனது மாஜி மனைவிக்கு எதிராக புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் டி,இமானுக்கும், மோனிகா ரிச்சர்டு என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிவித்தார் இமான்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய பதிவில், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்கள் தொலைந்து விட்டதாக தவறான தகவலை கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

800 கோடிப்பே.. தொடர் வசூல் வேட்டையில் ‘ஆர் ஆர் ஆர்’: ஆடிப்போன திரையுலகம்..!

இது தொடர்பாக இமான் அளித்துள்ள மனுவில், ஏற்கனவே பாஸ்போர்ட் உள்ள நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்கியது சட்டவிரோதம் என்பதால், தனது மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் கோரி சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும், அதை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் மீது நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளை சந்திக்க விடாமல் செய்யும் வகையில், அவர்களை வெளிநாடு அனுப்புவதற்காக தவறான தகவலை அளித்து மோனிகா புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். விவாகரத்து அறிவிப்பிற்கு பின் இத்தனை மாதங்களுக்கு பிறகு இமான், மனைவி மீது புகார் அளித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் மீது கேஸ்; சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார்!

அடுத்த செய்திபடத்த மட்டும் ஓட்டுங்க… தியேட்டர்களுக்கு திருப்பூர் சுப்பிரமணியன் வார்னிங்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.