சாலையின் பள்ளத்தில் இடறி விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய இளைஞர் தலை நசுங்கி பலி… பதைபதைக்கும் சிசிடிவிக் காட்சி

கோவை மாவட்டம் சூலூர் அருகே பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர், சாலையில் இருந்த பள்ளத்தில் இடறி விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கோர விபத்தின் சிசிடிவிக்காட்சி வெளியாகியுள்ளது.

சூலூர் அடுத்த ரங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர், அந்த பள்ளத்தில் இடறி விழுந்து
வலதுபுறம் வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி உயிரிழந்தார்.

ஹெல்மெட் அணிந்திருந்த போதும் பேருந்தின் இரண்டு சக்கரங்களும் ஏறி இறங்கியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.