மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்தது.. அணைக்கு வந்த நீரை மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்றனர்..!

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்துசேர்ந்த காவிரி நீரை விவசாயிகள் நெல்மணிகள், மலர் தூவி வரவேற்றனர்.

குறுவை நெல் பயிரிடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

அந்த நீர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் வழியாக நேற்றிரவு திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை முக்கொம்பு அணையின் மதகுகளைத் திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

விவசாயிகள், பொதுமக்கள் நெல்மணிகளையும், மலர்களையும் தூவி நீரை வரவேற்றனர்.

முக்கொம்பில் திறந்துவிடப்பட்டுள்ள நீர் கல்லணையை அடைந்ததும் இன்று மாலை 5 மணியளவில், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.