சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்காச்சோள தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமமே இந்த நிலைக்கு காரணம் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் விலைகள் அதிகரிக்கலாம்
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விற்பனை விலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.1,200க்கு மேல் விற்பனையாகிறது.
விலைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.