போலி இரத்தினக் கற்களை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த நபர் ஒருவரை எம்பிலிபிடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து இரத்தினக் கற்களாக வடிவமைக்கப்பட்ட கற்கள், இரத்தினக்கற்களைப் பரிசோதிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எம்பிலிபிட்டிய, மொரகட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் .
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளம் ஊடாக சந்தேக நபர் மோசடி வியாபாரத்தை செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் முதல் கொடுக்கல் வாங்கலில் பெறுமதியான இரத்தினக் கற்களை வழங்கியதுடன், அதன் பின்னரான கொடுக்கல் வாங்கல்களில் போலி இரத்தினக் கற்களை விற்பனை செய்து வர்த்தகர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளார்.
சந்தேகநபர் நீண்டகாலமாக இந்த மோசடியை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.