"ஹாரன் அடிச்சா நகர மாட்டியா…" காது கேளாத மாற்றுத் திறனாளியை குத்திக் கொன்ற சிறுமி

ஹாரன் அடித்தும் வழிவிடாததால் ஆத்திரமடைந்த 15 வயது சிறுமி காதுகேளாத நபரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது தாயாருடன் நேற்று இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் மெதுவாகவே நகர்ந்துக் கொண்டிருந்தன. அப்போது தனக்கு முன்பு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்தி செல்வதற்காக சிறுமி தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தார். ஆனால், அவர் வழி விடவில்லை.
image
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, அவரது வண்டிக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது கையில் இருந்த சிறிய கத்தியை எடுத்த சிறுமி, அந்த நபரின் கழுத்தில் குத்தினார். இதில் அந்த நபர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதனை பார்த்து பயந்த போன சிறுமி, தனது தாயாரை அங்கேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அந்த நபரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மேலும், பிறவியிலேயே அவர் காது கேளாதவர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த சிறுமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.