தீக்குளித்து இளைஞர் தற்கொலை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், எஸ். கொல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். பி.இ பட்டதாரியான இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.