அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு விரைவில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக,
தேர்வு செய்யப்பட்டார். இதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து, அதிமுக தலைமைக் கழக அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சொந்தமானது எனத் தீர்ப்பு அளித்த உயர் நீதிமன்றம், அலுவலக சாவியை அவரது தரப்பிடம் அளிக்க உத்தரவிட்டது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும், இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தார்.
இது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. எனினும் மனம் தளராத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் இணைய வேண்டும் என்ற அழைப்பை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு செல்ல ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தலைமைக் கழக அலுவலகத்திற்கு சென்று கட்சிப் பணிகளை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை முடிந்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் வழக்கின் உத்தரவை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்க, ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, வி.கே.சசிகலா – டிடிவி தினகரன் ஆகியோரை, ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் திரைமறைவில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நகர்வுகள், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.