கியூபாவையும் விட்டு வைக்காத குரங்கம்மை..! – முதல் பாதிப்பு நிலவரம்..!

கொரோனா தொற்று பரவலை கடந்து உலகம் முழுவதும் தற்பொழுது குரங்கம்மை தொற்று பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடாகவும் குரங்கம்மை தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கியூபா நாட்டில் முதல் முறையாக, இத்தாலியில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம். தெரிவித்துள்ளது. இதே போல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவையும் குரங்கம்மை விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை சுமார் 10 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கியூபாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து கியூபா வந்த சுற்றுலாப்பயணிக்கு தொற்று கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் புண்கள் ஏற்பட்டு, மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை அந்த நபர் நகரின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடார்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் குரங்கம்மை நோய் தொற்று பரவி வருவது மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.