போபால்: மத்திய பிரதேசத்தின் மோரேனா மாவட்டத்தில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் அக்னிபாதை திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்ய நேற்று நடந்த சோதனையில் இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், அம்பேத்கர் திடலில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவை விரட்டி கொண்டு ஓடுவது, பின்னர் இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபடுவது, உருட்டு கட்டைகளைக் கொண்டு தாக்கி கொள்வது, இறுதியில் கைகலப்பில் ஈடுபட்டது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன. இதன் உச்ச கட்டமாக மைதானத்தில் உள்ள ஓடு தளத்தில் ஓடும் போது துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கிறது. இது தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், வன்முறை கட்டுக்குள் வந்ததும் ஆட்தேர்வு பணி தொடர்ந்தது.
