உணவில் பல்லி : 33 மாணவியருக்குவாந்தி, மயக்கம்| Dinamalar

ஹைதராபாத்,தெலுங்கானாவில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 33 பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வர்தன்னாபேட்டையில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் தயாரித்து வைத்த உணவில், ஒரு பல்லி இறந்து கிடந்தது. இதுபற்றி, ஒரு மாணவி சமையல்காரரிடம் கூறினார். ஆனால், அது பச்சை மிளகாய் என அவர் கூறி விட்டார்.இந்நிலையில், அந்த உணவை சாப்பிட்ட மாணவியருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனையில் அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவர்கள் வாரங்கல் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.