சென்னை: மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தகுதிச் சான்றிதழுக்கான கட்டணங்களை ஒருமைப்படுத்துதல், மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறைகளை எளிமைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான சீராய்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதால், தகுதிச் சான்றிதழுக்கான தொழில்நுட்ப நுழைவுகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
தகுதிச் சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள், சில நாட்கள் பொறுத்திருந்து பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுதற்காலிகமானதே. 15-ம் தேதிக்கு பிறகுவிண்ணப்பம் ஏற்கப்படும். யாரும் பதற்றப்பட வேண்டாம். அனைவரது விண்ணப்பமும் பரிசீலிக்கப்படும்.