வெலிங்டன்:”கிரிக்கெட்டில் உள்ளது போன்ற சிறப்பான ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்பட அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும்,” என, நியூசிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் துாதரக துணை அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.இதைத் தொடர்ந்து நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினர் இடையே அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு எப்போதும் நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நம் உறவை புதுப்பிக்க வேண்டிய, மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.
கிரிக்கெட்டில் நம் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. நியூசிலாந்து வீரர் ஜான் ரைட்டை இந்தியர் எவரும் மறக்க மாட்டர்கள். ஐ.பி.எல்., போட்டியை பார்க்கும் எவரும், ஸ்டீபன் பிளெம்மிங்கை புறக்கணிக்க முடியாது.
![]() |
கிரிக்கெட்டில் நம் அணி வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புவோம். அதே நேரத்தில் மற்ற அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்போம்.அதுபோல இந்தியா, நியூசிலாந்து இடையே, வர்த்தகம் உட்பட பல துறைகளில் நம் உறவை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement