பாகிஸ்தான் வந்திருக்கும் மலாலா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்

கராச்சி:நோபல் பரிசு பெற்ற, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான மலாலா யூசப்சாய், ௨௫, அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தொடர் கனமழையால், வெள்ளம் மற்றும் பேரழிவு ஏற்பட்டது. இதில், ௧,௭௦௦க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து, இடம்பெயர்ந்தனர்.

இதற்கிடையே, தலிபான்களின் தாக்குதலால் உயிருக்கு போராடிய மலாலா, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அங்கு வசிக்கும் மலாலா, நான்கு ஆண்டுகளுக்குப் பின், பாகிஸ்தான் வந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார் .


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.