பிரபல ஹோட்டல் கொடுத்த அதிர்ச்சி! தேங்காய் சட்னியில் முழு பல்லி..!!

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபலமான ஹோட்டலில் சட்னியில் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான பட்டய பயிற்சி சிவகங்கையில் நடைபெற்று வருகிறது. இதற்கு வருகை தந்த கவுன்சிலர் ஒருவர் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிடச் சென்றுள்ளார்.

அப்போது அவருக்குப் பரிமாறப்பட்ட சட்னியில் முழு பல்லி ஒன்று வெந்து கிடந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த ஊராட்சி தலைவர் மற்ற ஊராட்சித் தலைவர்களிடம் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்து அந்த ஹோட்டல் உரிமையாளரிடம் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ஹோட்டல் உரிமையாளர் சரியான பதிலை சொல்லாததால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் . வாக்குவாதம் தொடர்ந்து இருக்கிறது . இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் உடனடியாக ஓட்டலுக்கு வந்துள்ளனர். இதற்கிடையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவகங்கை ஆட்சியருக்கு புகார் அளிக்க அவர் மூலமாக உணவுத்துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது தயார் செய்யப்பட்ட உணவுகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்று இருக்கிறார்கள்.

தகவல் அறிந்து சிவகங்கை நகர் மன்ற தலைவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். ஓட்டலில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டலையும் மூட உத்தரவிட்டு உள்ளனர். அதன் பின்னர் ஓட்டல் உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக ஹோட்டல்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.