துபாய் டூ தெலங்கானா: விமானத்தில் கடத்திவரப்பட்ட 1.4 கிலோ தங்கம் பறிமுதல் – 2 பெண்கள் கைது

துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பெண்களை கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, துபாயில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரை சோதனையிட்ட போது அவரிடம் 1.4 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.
image
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 2 பெண்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ₹74 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.