
கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசு மேலும் 936 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சந்தையில் இருக்கும் ஆதிக்கத்தை பயன்படுத்தி, தனது பேமேண்ட் வங்கி செயலி மற்றும் செயலி வழி பேமெண்ட் அமைப்பை பிரபலபடுத்திய குற்றச்சாட்டின்கீழ், மத்திய தொழிலக போட்டி ஆணையத்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த வியாழக்கிழமையும் கூகுளுக்கு ஆயிரத்து 337 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதையும் சேர்த்து, ஒரே வாரத்தில் 2,274 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.