டெல்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் 55,200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு, கடந்த 2016 ஜனவரில் ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, இந்த ஆண்டில்தான் மிக அதிக எண்ணிக்கையில் புத்தாக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதாவது நாடு முழுவதும், ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ (Startup India) முன்னெடுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஒரே ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாக, 2025-26 நிதியாண்டில் […]