வாயு தொல்லையால் ரொம்ப அவதிப்படறீங்களா? இந்த ஆசனத்தை தவறாமல் செய்து பாருங்க போதும்


இன்றைய காலத்தில் மக்கள் பலர் வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளால் அதிகமாக அவஸ்தைப்பட்டு வருகின்றார்கள்.

பல்வேறு தீர்வுகள் இருந்தாலும், இயற்கையான வழியில் அதற்கு தீர்வு காண்பது ஒன்றே நன்மை தரும்.

அதிலும் வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு பாலாசனம் என்ற யோகசான முறை பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் இதனை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

 வாயு தொல்லையால் ரொம்ப அவதிப்படறீங்களா? இந்த ஆசனத்தை தவறாமல் செய்து பாருங்க போதும் | Are You Suffering From Gas

செய்யும் முறை    

முதலில் குழந்தை படுத்திருப்பது போல மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு முழங்கால்களையும் வளைத்து, கால்களைத் தரையில் ஊன்றியபடியே முதுகுப் பகுதியில் பேலன்ஸ் செய்து படுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு முழங்கால்களையும் மார்புப் பகுதியை நோக்கி உயர்த்த வேண்டும். கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நேரம் இந்த நிலையில் தாக்குப்பிடித்து அப்படியே இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்க வேண்டும். இப்படி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்து வருவதன்மூலம் வாயுத்தொல்லை குறையும்.

  

நன்மைகள்

இந்த ஆசனத்தைச் செய்யும்போது வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் வாயுக்கள் வெளியேற்றப்பட்டு, வீங்கிய வயிறு தட்டையாக மாறும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.