முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள்: பதிவு கால எல்லை நீடிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருளை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டத் திட்டத்தில் இதுவரையில் 9 ஆயிரத்திற்குமேற்பட்ட முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பதிவு நடவடிக்கை இன்றுடன்நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதற்கான சந்தர்ப்பத்தை மேலும் வழங்குவதற்காக பதிவு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் ஆரம்ப பரீட்சார்த்த நடவடிக்கை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.