வினாத்தாள் குளறுபடி: இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தமிழ் தேர்வு ரத்து

சென்னை: வினாத்தாள் குளறுபடி காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தமிழ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலைக்கழககம் மற்றும் அதன்கீழ் செயல்படும்  இணைப்பு கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில்  தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று இரண்டாம் ஆண்டிற்குரிய மூன்றாவது செமஸ்டர் தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறையில்,   3வது செமஸ்டர் தேர்வு தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக கடந்தாண்டு நடைபெற்ற 4வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது தேர்வு எழுந்த மாணாக்கர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாணவர்கள் தேர்வு கண்காணிப்பளிடம் புகார் கொடுத்தனர். இதை ஆய்வு செய்த அதிகாரிகள், வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து, இன்று நடைபெறும் தேர்வு  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான மாற்று தேதி அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.