இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு!

மேற்கு இந்தோனேசியாவின் கடற்கரையில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சுமத்ராவின் பெங்குலு நகருக்கு தென்மேற்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் ((Enggano)) எங்கானோ என்ற சிறிய தீவுக்கு அருகில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், இரவு 8 முதல் 9 மணிக்கு இடையே ரிக்டர் அளவில் 6.9 மற்றும் 5.4 ஆக இருமுறை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.