தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் நியமனம்; மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அதேபோல் 68 தொகுதிகள் உள்ள இமாச்சல் மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தநிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்களில், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது.

அதேபோல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளது. எனவே மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுவதால், மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையரை நியமித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பெரு நிறுவனங்கள் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயலை தேர்தல் ஆணையரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 1985 பேட்சை சேர்ந்த அதிகாரியான அருண் கோயல், தனது ஓய்வு பெறும் காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.