திருவள்ளூர் அருகே ரெயில் மோதியதில் முதியவர் பலி.!

நேற்று திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அருகே வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். 

அப்போது, அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதிyathil தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? உள்ளிட விவரங்கள் எதுவும் தெரியவில்லை. 

ஆனால், உயிரிழந்த நபர் சிமெண்ட் மற்றும் வெள்ளை நிறத்தில் கோடு போட்ட சட்டையும், நீலம் மற்றும் பச்சை நிறம் கலந்த கோடு போட்ட லுங்கியும் அணிந்து இருந்தார். 

இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.