பெங்களூர்: ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை; சந்தேகத்தில் காதலியைக் கொலைசெய்த வாலிபர் கைது!

கர்நாடக மாநிலம், பெங்களூரு தம்புச்செட்டிபாளைய (டி.சி., பாளையா) பகுதியில், நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் தமணி (27) மற்றும் கிருஷ்ணகுமாரி (23) ஆகியோர், ‘லிவிங் டுகெதரில்’ வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ‘பியூட்டி பார்லர்களில்’ பணியாற்றி வந்தனர். காதலர்களான இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகரித்தபோது, கோபமடைந்த  சந்தோஷ், கிருஷ்ணகுமாரியை தாக்கி கழுத்தை நெரித்து சுவற்றில் தள்ளினார். இதில், அவர் இறந்தார்; சந்தோஷ் அங்கிருந்து தப்பியோடினார்.

Murder

நேற்று இரவு, கிருஷ்ணகுமாரியை தேடி வந்த தோழி, அவர் கட்டிலில் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார். அப்போது, கிருஷ்ணகுமாரி இறந்தது தெரியவந்தது. கிருஷ்ணகுமாரியின் தோழி கொடுத்த புகாரின் பேரில், இன்று காலை சந்தோஷ் தமணியை பெங்களூர் ராமமூர்த்தி நகர் போலீஸார் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘தன்னை கிருஷ்ணகுமாரி ஏமாற்றுவதாக நினைத்து சந்தேகப்பட்ட சந்தோஷ், அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று, கோபத்தில் அவர் கழுத்தை நெரித்ததில் கிருஷ்ணகுமாரி இறந்துள்ளார். தலைமறைவாக இருந்த சந்தோஷ் கைது செய்யப்பட்டார்” என்றனர்.

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த அஃப்தாப், தன்னுடன் ‘லிவிங் டுகெதராக’ வசித்து வந்த காதலி ஷ்ரத்தாவை, கழுத்தை நெரித்துக் கொலைசெய்தான். கொலை செய்தபின் உடலை, 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து பல்வேறு இடங்களில் வீசினான். இச்சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, பெங்களூரில் ‘லிவிங் டூகெதர்’ உறவில் கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.