உள்ளாட்சி தேர்தல்..அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

டெல்லி மாநகராட்சி தேர்தலை ஒட்டி, அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஏற்பாடு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மெட்ரோ ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி தேர்தல் எதிரொலியாக டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு இன்றும், வரும் 5 ஆம் தேதியும் விடுமுறை அறிவித்து மாநில கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.