அமராவதி: திருப்பதி பத்மாவதி பல்கலைக்கழகத்துக்கு சென்று, மகளிர் குழுவினர் தயாரித்த பொருட்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வையிட்டார். இதையடுத்து, பேராசிரியர்கள், மாணவர்களுடன் திரவுபதி முர்மு கலந்துரையாடினார்.
‛‛ திருப்பதியில் சாமி தரிசனம்”:
அரசு முறைப் பயணமாக ஆந்திரம் சென்றிருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று(டிச.,05) திருப்பதி கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் வரவேற்பு அளித்தார். மேலும் அவர் ஜனாதிபதிக்கு பிரசாதங்களை வழங்கினார்.
இது நாட்டின் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல் முறையாக, திருப்பதியில் சுவாமி தரிசனம் ஆகும். தரிசனங்களை முடித்துக் கொண்டு கிளம்பிய, ஜனாதிபதிக்கு கோயிலின் சார்பில், கோயில் புத்தகம் மற்றும் கோயில் சார்பில் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கால நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவையும் வழங்கப்பட்டது.
பத்மாவதி பல்கலைக்கழகத்துக்கு சென்று, மகளிர் குழுவினர் தயாரித்த பொருட்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வையிட்டார். இதையடுத்து, பேராசிரியர்கள், மாணவர்களுடன் திரவுபதி முர்மு கலந்துரையாடினார். அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு சுயஉதவி குழுக்கள் பற்றி ஆலோசித்தார்.
தொடர்ந்து பத்மாவதி தாயார் கோயிலில் தரிசனம் மேற்கொள்கிறார். தொடரந்து ரேணிகுண்டா விமான நிலையம் சென்று ஜனாதிபதி டில்லி திரும்புகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement