தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரயில் மூலம் தென்காசி பயணம்.!

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இன்று ரயில் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  இன்று இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் தென்காசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ரயில் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க ஸ்டாலின் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன் பின்னர் தென்காசியில் இருந்து ரயில் மூலம் மதுரைக்கு செல்லும் அவர் மதுரை மாநகராட்சி வளைவு மற்றும் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

 இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்பு அன்று இரவே ரயில் மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.