போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம் கீழ்பாதி பகுதி அம்பேத்கார் நகரை சேர்ந்த தியாகராஜன் மகன் தமிழ்செல்வன் (28). கீரமங்கலம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. 4 நாட்களுக்கு முன்பு மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். நேற்றுமுன்தினம் தனது ரூமில் தூங்க சென்ற அவர் நேற்று காலை இறந்து கிடந்தார். தகவலறிந்த நாகுடி போலீசார் விசாரணை நடத்தினர். அவரது ரூமில் இருந்த கடிதத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி அவருடைய கையொப்பம் போட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.