ராணுவ முகாம் நுழைவு வாயிலில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 2 பேர் பரிதாப பலி

ரஜோரி: ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமில் வேலைக்காக நுழைய முயன்றவர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அமைந்துள்ள ராணுவ முகாமிற்கு நேற்று காலை 6.15 மணியளவில் உள்ளூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சென்றுள்ளனர். முகாமின் நுழைவு வாயில் கேட்டை பொதுமக்கள் நெருங்கியபோது திடீரென அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் பொதுமக்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவ வீரர்கள் காயமடைந்தவரை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. துப்பாக்கி சூட்டில் இறந்.துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அப் பகுதியில் திரண்ட பொதுமக்கள் ராணுவ முகாம் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும்   தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.