சென்னை : நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு படமான உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய்சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதை திருடப்பட்டு உப்பெனா படம் உருவாக்கப்பட்டதாக தேனியைச் சேர்ந்த உதவி இயக்குனர் எஸ்.யூ.டல்ஹவுசி பிரபு மனு அளித்துள்ளார்.
