பல மாகாணங்களில் 150 மி மீ. மேற்பட்ட கன மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழ முக்கம் கிழக்கு கரையோரத்தின் ஊடாக நாட்டிற்குள் பரவேசித்து ,இலங்கை ஊடாக நகர்ந்துவருவதாக வளிமணடலவியல் திணைக்களம் இன்று (25) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, மேல் மத்திய , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் பொலநறுவ மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி மீ. மேற்பட்ட கன மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ மேற்பட்ட கன மழை பெய்யக்கூடும்.
நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.