பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

பொங்கல் பரிசுடன் செங்கரும்பும் வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி தாக்கல் செய்த மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில், இந்தாண்டும் கரும்புகள் பயிரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாததால், அதனை குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொங்கலையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசுடன் செங்கரும்பையும் வழங்கக்கோரி, டிசம்பர் 24ம் தேதி அளித்த மனுவை, தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.