இந்தியாவில் பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை: உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு

டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு  வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகை என்றால் அது பாசுமதி அரிசி தான். அந்த வகை அரிசி இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைய வைக்க படுகிறது. அங்கு விளையும் நீளமான, மணமுள்ள அரிசி மட்டுமே ஒரிஜினல் பாசுமதி அரிசி.

ஆனால், ஒரு சில இடங்களில் செயற்கையாக அரிசிக்கு நிறமூட்டி, செயற்கை மணம் செலுத்தப்பட்டு விற்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது அரசு உணவு தர பாதுகாப்பு நிர்ணயம் புதிய விதிகளை விதித்துள்ளது. செயற்கை மணம், செயற்கை நிறமூட்டி அதனை பாசுமதி அரிசி என விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ஏனென்றால்  பாசுமதி அரிசி பேக் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதன் விற்பனை பாதிக்கப்பட்டுவிட கூடாது என ஆகஸ்ட் மாதம் முதல் இந்த தடை விதிக்கப்படுகிறது என உணவு தர பாதுகாப்பு நிர்ணயம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.