மதுரை: கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோயில் வழிபாட்டில் கிராம மக்கள் அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். சிங்கம்புணரி மல்லாகோட்டை கிராமத்தில் உள்ள கோயில்களில் அனைவரையும் சரிசமமாக நடத்த உத்தரவிடக்கோரி சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
