நாளை பள்ளிகள் திறக்கப்படுமா..? – தமிழக அரசு திடீர் விளக்கம்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14 போகிப் பண்டிகை, ஜனவரி 15 பொங்கல் பண்டிகை , 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பண்டிகை கொண்டாட ஏராளமான மக்கள் சொந்த ஊர் சென்றுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. மேலும், ஜனவரி 18 ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இதற்கிடையே, இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பொங்கல் விடுமுறைக்கு பிறகு புதன் கிழமை (ஜனவரி 18) பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்” என்று தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் முடிவடைகிறது. இதை அடுத்து, தமிழகம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. வழக்கம் போல் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. நான்கு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து பெரும்பாலான பள்ளிகளில் தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. நாளையும் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.